search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரிந்துணர்வு ஒப்பந்தம்"

    • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
    • தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்கள்.

    தமிழ்நாட்டின் பரவலான தொழில் வளர்ச்சிக்கு சரக்கு போக்குவரத்தினை திறமையாகக் கையாளுவது மிகவும் அவசியமானதாகும். தமிழ்நாட்டில் உள்ள நான்கு துறைமுகங்களைப் பயன்படுத்தி, சரக்குகளைக் கையாளும் கண்டெய்னர் துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாட்டில் அமைத்திட பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது. இத்துறைக்கான தனிக்கொள்கை ஒன்றும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.


    அந்த வகையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெஸ்பர் கன்ஸ்ட்ரப் மற்றும் இயக்குநர் ஆல்பர்ட் லோரெண்டே ஆகியோர் முதலமைச்சர் அவர்களை 31.1.2024 அன்று சந்தித்துப் பேசினார்கள்.

    இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இக்கூட்டத்தில், 2500 கோடி ரூபாய் முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

    அதனைத் தொடர்ந்து, சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் லாரா பெர்ஜானோ, சர்வதேச மற்றும் நிறுவன உறவுகளின் தலைவர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்துப் பேசினார்.

    இச்சந்திப்பின்போது, இந்தியாவிலேயே அதிகமான சாலை அடர்த்தியும், தரமான சாலை கட்டமைப்பும் தமிழ்நாட்டில் உள்ளன என்பதையும், தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த சாலை கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தி, அபர்ட்டிஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.

    இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, கைடன்ஸ் (Guidance) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் அலுவலர் திரு.வே.விஷ்ணு, ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஆப்டிமஸ் இன்ப்ராகாம் நிறுவனம், இந்தியாவில் கைபேசிக் கூறுகள் மற்றும் மடிக்கணினி உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.
    • திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், நாட்டிலேயே முதன் முறையாக தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும்.

    சென்னை:

    சென்னையில் இந்த மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட கார்னிங் இண்டர்நேஷனல் நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். கைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கைக்கணினிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் வலுவூட்டப்பட்ட 'கார்னிங் கொரில்லா கிளாஸ்' உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும்.

    ஆப்டிமஸ் இன்ப்ராகாம் நிறுவனம், இந்தியாவில் கைபேசிக் கூறுகள் மற்றும் மடிக்கணினி உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.

    பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்-பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 1003 கோடி ரூபாய் முதலீட்டில், 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நவீன முறையில் முன்-கவர் கண்ணாடி தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள் மற்றும் கைபேசி உற்பத்தியாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

    இத்திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், நாட்டிலேயே முதன் முறையாக தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும்.

    தமிழ்நாட்டில் இதற்கான தொழிற்சாலை அமைக்கப்படுவதற்காக, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான மற்றும் பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
    • புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

    உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கோடிகளை கொட்டி முதலீடு செய்துள்ளன.

    இந்நிலையில், எரிசக்தி துறையில், 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளன.

    பேச்சு வார்த்தை நிறைவு பெற்றுள்ள நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
    • பயிற்சி பட்டறை மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு திட்ட பயிற்சி இந்த தொழில் நிறுவனத்தில் அளிக்கப்படும்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (சுயநிதி பிரிவு) மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை மற்றும் ஐ.பி.சி.எஸ். குளோபல் சொல்யூசன் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தில் மாண–வர்களுக்கு ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்குகள், பயிற்சி பட்டறை மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு திட்ட பயிற்சி இந்த தொழில் நிறுவனத்தில் அளிக்கப்ப–டும்.

    இதன் மூலம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் வேலை–வாய்ப்பு மற்றும் துறை சார்ந்த தொழில் தொடங்கு–வதற்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புரிந்துணர்வு ஒப்பந் தம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி செயலா–ளர் எம்.விஜயராகவன்,

    கல்லூரி முதல்வர் முனை–வர் அ.ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குநர் ச.பிரபு, துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஐ.பி.சி.எஸ். குளோ–பல் சொல்யூசன் தனியார் நிறுவனத்தின் சார்பில் கிளை இயக்குநர் கே.கார்த்தி, கிளை மேலாளர் கே.சரவணன் ஆகியோர் முன்னிலையில் கையொப்பம் இடப்பட்டது.

    • ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
    • தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்

    சென்னை:

    சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றதுடன், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொண்டார்.

    அந்த வகையில் இன்று ஜப்பானின் டோக்கியோவில் உள்ள முன்னணி நிறுவனமான ஓம்ரான் ஹெல்த்கேர் இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலையை நிறுவிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விஷ்ணு, ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் அம்மு ஒகடா, செயல் அலுவலர் கசுகோ சூரியாமா, ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் (வியட்நாம்) தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் டாகுடோ இவனாகா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • விவசாயிகள் உற்பத்தி செய்யும் தாக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
    • மதிப்பு கூட்டுதல் செய்யப்பட்ட தக்காளி பொருட்களுக்கு சந்தையில் தேவைகள் அதிகமாக உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பாக ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தொழில் மானிய நிதியை கொண்டு, தக்காளி மதிப்புக் கூட்டுதல் செய்வதற்கான தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம், பெங்களூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்துடன், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் நடந்தது.

    தொடர்ந்து வேளாண் தொழில்நுடப விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது புத்துணர்வு பெற்று பல மேம்பாடுகள் செய்யப்பட்டு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என பெயர் மாற்றம் செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் உலக வங்கியின் நிதியுதவியுடன் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படும் திட்டமாகும்.

    இந்த திட்டம் ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடனும் தொடங்கப்பட்டதாகும். தமிழக கிராம சூழலை மறு சீரமைக்க வெவ்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. வறுமை ஒழிப்பைத் தாண்டி நிலையான வாழ்வாதாரத்தை அமைத்து, அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஊரக நிறுவனங்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு தேவையான நிதியுதவிகளை அமைத்து தருவது, வேலைவாய்ப்புகள் உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    இந்த திட்டத்தின் மூலம் இந்த மாவட்டத்தில் ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், மாஞ்சோலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என 2 நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த 2 உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஆயிரம் நபர்கள் உள்ளனர். மேலும், ஆரம்ப கட்ட நிதியாக தலா ரு.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தொழில் விரிவாக்க நிதியாக தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பெற்றப்பட்ட தொழில் மானிய நிதியை கொண்டு தக்காளி மதிப்புக் கூட்டுதல் செய்வதற்கான தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தமானது, பெங்களூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கையொப்பமிடப்பட்டது. இதன் மூலம் ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யும் தாக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

    மேலும் மதிப்பு கூட்டுதல் செய்யப்பட்ட தக்காளி பொருட்களுக்கு சந்தையில் தேவைகள் அதிகமாக உள்ளது. விலையில் சரிவு ஏற்படு காலகட்டத்திலும் விவசாயிகள் நிலையான வருமானத்தை பெறுவர். இதனால் ஆயிரம் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், பெங்களூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் டாக்டர்.சஞ்சய் குமார் சிங், முதன்மை விஞ்ஞானிகள் வெங்கடகுமார், செந்தில்குமார், சங்கர், புவனேஸ்வரி, எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ், செயல் அலுவலர்கள் பிரதீப்குமார், சிவக்குமார், சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
    • கல்லூரியின் தாளாளர் ஆர். சோலைசாமி, இயக்குநர் விக்ேனசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, ெசன்னையில் உள்ள மத்திய அரசின் தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கல்லூரியின் சார்பில் டீன் மாரிச்சாமி, என்.ஐ.டி.டி.டி.ஆர். சார்பில் அதன் இயக்குநர் உஷா நடேசன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    சென்னையில் நடந்த இந்த நிகழ்வில் சென்னை என்.ஐ.டி.டி.டி.ஆர். முனைவர்கள் ரேணுகா தேவி, ஜனார்த்தனன், ராஜசேகரன், கிரிதரன் கல்லூரியின் ஐ.கியூ.ஏ.சி. பேராசிரியர். பால சுப்பிரமணியன், ஒருங்கி ணைப்பாளர் பிச்சிப்பூ, ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்வியில் ஒத்துழைப்பு தருதல், ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்பு ஆகியவை பெறப்பட்டு இதன் மூலம் ஆசிரியர்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளை என்.ஐ.டி.டி.டி.ஆர்.-ன் ஆய்வக வசதிகள், பயன்பாடு, ஆசிரியர் மேம்பாட்டுத் திறன் பயிற்சி, அரசின் நிதி பெறும் செயல்முறைத் திட்டங்கள் மற்றும் ஆய்வுகள், காப்புரிமை, இண்டர்ன்ஷிப் ஆகிய வற்றைப் பெறமுடியும்.

    மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆன்லைன் பாடங்களை இலவசமாக பதிவு செய்து கற்றுக் கொள்ளலாம். இந்த பு ரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்விற்கு முயற்சி செய்த பேராசிரியர்களை கல்லூரியின் தாளாளர் ஆர். சோலைசாமி, இயக்குநர் விக்ேனசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.

    • இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட முயற்சிக்கு மத்திய மந்திரி பாராட்டு
    • கால்நடைகளுக்கான தோல் நோயை கட்டுப்படுத்த, தடுப்பூசியின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது

    கால்நடைகளை தாக்கும் ஆட்டு அம்மை எனப்படும் தோல் நோயை கட்டுப்படுத்த, அரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய குதிரைகள் ஆராய்ச்சி மையமும், உத்தர பிரதேச மாநிலம் இசட்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, லும்பி ப்ரோவாக் என்ற தடுப்பூசியை உருவாக்கியது.

    இந்த தடுப் பூசியை வணிக ரீதியில் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய கால்நடை பராமரிப்புதுறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் முன்னிலையில் இது கையெழுத்தானது. 


    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி ரூபாலா, உள்நாட்டு தடுப்பூசியான லும்பி ப்ரோவாக்கை உருவாக்குவதில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது என்றார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் கால்நடைத் துறையின் எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு, ஆட்டு அம்மை நோயை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை பெரிய அளவில் தயாரிப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

    மாடுகள் உள்பட வீட்டு விலங்குகளுக்கு தோல் நோயை கட்டுப்படுத்துவதில் இந்த தடுப்பூசியின் செயல்திறன் நிரூபிக்கப் பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு உதவும் வகையில் தடுப்பூசியை காலதாமதமும் இல்லாமல் பெரிய அளவில் தயாரிக்கத் தொடங்க வேண்டும் என்று புனேயில் உள்ள கால்நடை மருத்துவ உயிரியல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • உதவி பேராசிரியர் கிருபா சேகர் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறையின் திருத்தங்கள் தமிழா மென்பொருள் நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

    கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலெட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    உதவி பேராசிரியர் முத்து சீனிவாசன் வரவேற்றார். மென்பொருள் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி தமிழா கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

    உதவி பேராசிரியர் கிருபா சேகர் நன்றி கூறினார்.

    • சன் பயோ நேச்சுரல்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • வேப்பங்கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிப்பது, மூலப்பொருட்களை எவ்வாறு சேமிப்பது குறித்து விவாதம் நடந்தது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயோ ஆராய்ச்சி மற்றும் பூச்சி கட்டுப்பாடு எனும் தலைப்பில் ஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக சன் பயோ நேச்சுரல்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் டாக்டர் சேது குமணன், சன் பயோ நேச்சுரல்ஸ் நிறுவன அதிகாரி சக்திவேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    கல்லூரியின் கூட்ட அரங்கில் பயோ ஆர்கானிக் உரம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு குறித்த விவாதம் நடந்தது. வேப்பங்கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிப்பது, மூலப்பொருட்களை எவ்வாறு சேமிப்பது குறித்து விவாதம் நடந்தது. உதவி பேராசிரியர் கருப்புராஜ், ஆர்கானிக் உரம் தொழில்நுட்பத்தை பற்றியும், பூச்சியல் இணை பேராசிரியர் விஷ்ணுபிரியா, ஆர்கானிக் பூச்சிக்கொல்லி பற்றியும் பேசினர். இதில் கல்லூரி தாளாளர் சேதுகுமணன், பயோ நேச்சுரல்ஸ் சக்திவேல், ஆடிட்டர் எழில், இயக்குநர் கோபால் உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • இரண்டு வருடத்திற்கான சர்வதேச அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
    • கல்லூரி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது

    கரூர் :

    கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் சார்பில் கணினி பொறியியல் துறை தலைவி, முனைவர் திலகமணி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ் பாபு முன்னிலையில் சிங்கப்பூரில் உள்ள நிறுவனமான ஆக்ஸ் கன்சல்டன்சியுடன் இரண்டு வருடத்திற்கான சர்வதேச அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு வளாக நேர்காணலின் மூலம் வேலை வாய்ப்பு அளிக்கவும், மேலும் கல்லூரி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஓப்பந்தத்தில் ஆக்ஸ் கன்சல்டன்சி நிறுவன இயக்குனர்கள் இந்து மற்றும் வெங்கடேஷ், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ் பாபு, கணினி பொறியியல் துறை தலைவி, முனைவர் திலகமணி மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்த ஒருங்கிணைப்பாளர், உதவி பேராசிரியர், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    • ஆய்வு உபகரணங்கள் பற்றிய பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
    • எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி, உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் நீதிராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    ஓசூர்,

    ஒசூரில் உள்ள எம்.ஜி.ஆர். கல்லூரியும், பெங்களுரு அரசு உதவிபெறும் ஐ.பி.ஏ.பி. நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளது.

    இதன் மூலம், மாணவர்கள் அந்த நிறுவனத்திற்குச் சென்று உயிர்த்தகவலியல் துறை, உயிர்த்தொழில் நுட்பவியல் துறை, சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ளவும், பயிற்சி முடிந்ததும் வேலைவாய்ப்பு கிடைக்கும் நோக்கத்துடன் அந்நிறுவனத்தின் இயக்குநருடன் ஒப்பந்தமிடப்பட்டது.

    மேலும், பெங்களுரு 'சேன்ஜீன் பயோடெக்' நிறுவன ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாணவர்கள் சமகால ஆய்வு, ஆய்வு உபகரணங்கள் பற்றிய பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    முன்னாள் துணைவேந்தரும், அதியமான் கல்விக்குழும ஆலோசகருமான முத்துச்செழியன் முன்னிலையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நிறுவன தலைவர் பிரசாத், எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி, உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் நீதிராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    ×